டாஸ்மாக் கடையில் ரூ.27.5 லட்சம் முறைகேடு மேற்பார்வையாளர் உள்பட 2பேர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு மதுபான கடையில் 27லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணம் கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ் மேற்பார்வையாளர் உட்பட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் இவர்கள் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வரிக்கல்லில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பறக்கும் படை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டதில் 27 லட்சத்து 69 ஆயிரத்து 980 ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments