முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் இபிஎஸ் மலர்கள் தூவி மரியாதை
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, அருகிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்திய அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Comments