அரசுக்கு சொந்தமான 110 கிரவுண்ட் நிலத்தை உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு..!

0 1099

சென்னை தோட்டக்கலை சங்கம் பெயரிலுள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்த தடை இல்லை என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலம் ஒட்டிய அரசுக்கு சொந்தமான நிலத்தை, தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில், வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments