குடியரசுத் தலைவர் மாளிகையில் வருகிற 1ந்தேதி முதல் சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி..!

குடியரசுத் தலைவர் மாளிகையை வருகிற டிசம்பர் மாதம் 1ந்தேதி முதல் பொதுமக்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தலா ஒரு மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும்.
அதுபோல், குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம்.
Comments