தேர்தல் தோல்வியை மல்லிகார்ஜூன கார்கே மீது சுமத்த ராகுல்காந்தி திட்டம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்..!

தேர்தல் தோல்விக்கு காங்கிரஸின் புதிய தலைவரை பொறுப்பாக்கவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொள்ளவில்லையென மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி செல்லாதது வியூகமா அல்லது புதிய ராஜநீதியா என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.
ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடத்தும் யாத்திரையில் பிரிவினை பேசுவோரை உடன் அழைத்துச் செல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்
Comments