தமிழகத்தில் வரும் 29ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

0 3893

தமிழகத்தில் வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் 30ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 29, 30 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments