வேதகிரிஸ்வரர் கோவில் கோபுர உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு..!

0 2635

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோவில் வடக்கு புறத்திலுள்ள 150 அடி உயர கோபுர உச்சியில்  ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டார்.

இரவு நேரத்தில் கோபுரம் மீறி ஏறிய அந்த நபரை பேச்சுவார்த்தைக்கு பின்பு போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் அந்த நபர், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த தினேஷ்  என்பதும், வேலை பார்க்கும் வெல்டிங் கடையில்  சரிவர சம்பளம் தராததால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையாலும், காதல் தோல்வியாலும் மன உளைச்சலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments