அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

0 3329

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுவதாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார். மக்களவைத்தேர்தலில் அதிமுக கூட்டணி, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments