ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்

0 3630

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரம்  தீயணைப்பு துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக எடுக்கப்பட்டது.

விசாலாட்சி நகரைச் சேர்ந்த ஜோனத்என்பவரின் ஒன்றரை வயது மகன் வீட்டில் விளையாடி  கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவனது தலை அங்கிருந்த சில்வர் பாத்திரம்  மாட்டிக் கொண்டது. இதனால் அலறி துடித்த குழந்தையை பெற்றோர்  வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மருத்துவர்கள் உதவியுடன் குழந்தையின் தலையில் மாட்டி இருந்த சில்வர் பாத்திரத்தை எந்தவித பாதிப்பில்லாமல் வெட்டி எடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments