பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம் என தகவல்..!

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம் என தகவல்..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறப்படுகிறது.
Comments