மத்திய பிரதேசத்தில் நடமாடும் நகை கடையாக வலம் வரும் குல்பி வியாபாரி..!

0 2729

நடமாடும் நகை கடையாக உலா வருகிறார் மத்திய பிரதேசம் இந்தூரில் குல்பி வியாபாரி ஒருவர்.

”பிரகாஷ் குல்பி” என்ற பெயரில் பல ஆண்டுகளாக குல்பி வியாபாரம் செய்து வருகிறார் பன்டி யாதவ்.

திடமான தங்க சங்கிலிகள், மோதிரங்கள், பிரேஸ்லட்டுகள் என நடமாடும் நகை கடையாக வலம் வருகிறார்.

தான் அணிந்திருக்கும் நகையின் எடை எவ்வளவு என்று தனக்கு தெரியாது என்றும் தனது நண்பர்கள் தனக்காக தயாரித்துக் கொடுக்கின்றதை தான் அணிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

பன்டி யாதவ் அணிந்திருப்பது சுமார் 2 கிலோ மதிப்புள்ள நகை என கூறப்படுகிறது. இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பன்டி யாதவுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments