விரைவு ரயிலுக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

0 3039

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் ரத்த காயத்துடன் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

காலை  9.30 மணியளவில் சத்திரபதி விரைவு ரயில் சிக்னல் விழாத காரணத்தால் மிகவும் மெதுவாக சென்றது. அப்போது முதியவர் ஒருவர்  தற்கொலைக்கு முயன்றதை  பின்னால் உள்ள பெட்டியில் இருந்த கார்டு பார்த்து, டிரைவருக்கு தகவல் தெரிவித்து சடன் பிரேக் அடித்து நிறுத்த செய்தார்.

இதனால் பெட்டியின் பக்கவாடு பகுதி இடித்து ஜல்லியில் விழுந்து முதியவர் காயமடைந்தார். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பதும், குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்திருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments