கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக 36 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

0 3977

கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுவது, சமூக ஊடகத்தின் வழியாக வதந்திகளை பரப்புவது போன்ற சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த விசாரணைக்கு ஆஜராக 6 யூடியூப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments