ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து..!

0 3625
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இக்கட்டிடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வரும் நிலையில், அதிகாலை மூன்றரை மணியளவில் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளையும் வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments