குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை அடித்தே கொன்ற தாய்.. தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!

0 4396
குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை அடித்தே கொன்ற தாய்.. தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்து கொலை செய்த தாய் தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார், அத்தாம்பாளையத்தை சேர்ந்த கனகசம்பத்திற்கு ரேவதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

கனகசம்பத் வெளியே சென்ற நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வந்த குழந்தைகளிடையே பேபி சண்டையிட்டதாக கூறப்படுகின்றது.

பின்னர் இரும்பு குழாய் மூலம் குழந்தைகளை அடித்த தில் இருவரும் உயிரிழந்தனர். பின்னர் பேபி செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் விசாரணையில் பேபி மனநல சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments