ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இன்று திறப்பு.!

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம் இன்று திறக்கப்பட்டது. செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில், 1315 மீட்டர் நீளத்தில் 1250 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் சென்றாலும் தாங்கக்கூடியது என்றும், இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றுடன், கடினமான பருவநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதை திட்டம், காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கிறது.
Comments