தேசியக்கொடியை போல் அணிவகுத்து நின்ற 20,000 மாணவர்கள்.. மாணவர்களின் முயற்சி உலகசாதனையாக பதிவு..!

தேசியக்கொடியை போல் அணிவகுத்து நின்ற 20,000 மாணவர்கள்.. மாணவர்களின் முயற்சி உலகசாதனையாக பதிவு..!
நாட்டின் 75 ஆவது விடுதலை அமுத பெருவிழாவை முன்னிட்டு, 20 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு கையில் தேசிய கொடியை ஏந்தியபடி, ஒரே நேரத்தில் தங்களது செல்போனில் இருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தியை அனுப்பி உலகசாதனை படைத்தனர்.
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாணவர்களின் இந்த சாதனையை உலக சாதனையாக அறிவித்து, உலக சாதனை ஒன்றியத்தின் மேலாளர் கிறிஸ்டோபர் விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
Comments