செஸ் ஒலிம்பியாட் போட்டி.. 8வது சுற்று ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் வெற்றி.!

0 3002

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 8ஆவது சுற்று ஆட்டத்தில், இந்திய ஓபன் 'பி' அணி பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது. தமிழக வீரர் குகேஷ் அபாரமாக விளையாடி, தொடர்ந்து 8ஆவது வெற்றியை பதிவு செய்தார். 

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 8-வது சுற்றில் இந்திய ஓபன் 'ஏ' அணி, அர்மேனியா அணியுடன் மோதியது. அப்பிரிவில், விதித் சந்தோஷ், அர்ஜுன், நாராயணன் ஆகியோர் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தன.

இந்திய ஓபன் 'பி' பிரிவில், தமிழக வீரர் குகேஷ், சத்வானி ஆகியோர் அமெரிக்க வீரர்கள் தோற்கடித்து தலா ஒரு புள்ளியை பெற்றனர். அப்பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா, சரின் நிகல் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தன.

இந்திய ஓபன் 'சி' பிரிவில், பெரு அணிக்கு எதிராக விளையாடிய, தமிழக வீரர்களான சேதுராமன், கார்திகேயன் முரளி ஆகியோர் போட்டிளை டிரா செய்தனர்.

மேலும், மகளிர் 'ஏ' பிரிவில், உக்ரைன் அணிக்கு எதிரான போட்டிகளை தமிழக வீராங்கனை வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, தன்யா சச்தேவ் ஆகியோர் சமன் செய்தனர்.

மகளிர் 'பி' பிரிவில், வந்திகா அகர்வால், பத்மினி, திவ்யா ஆகியோர் குரோஷிய வீராங்கனைகளை வீழ்த்தினர். மேரி ஆன் விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது. அதேபோல் மகளிர் 'சி' பிரிவில், போலந்து அணிக்கு எதிராக ஈஷா, விஷ்வ வஸ்னாலா விளையாடிய போட்டிகளும் டிராவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments