அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 8ஆம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது.
Comments