கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டிருந்த வடமாநில சிறுவன் கழுத்தறுத்து கொலை.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 பேர் கைது!
சென்னையில் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டிருந்த வடமாநில சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு செல்போனை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை, தண்டையார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுர்பதி சர்தார் என்ற 17 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தான்.
அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்த்தபோது 2 இளைஞர்கள் முகத்தை மறைத்துக்கொண்டு செல்வது தெரியவந்தது. காசிமேடு, புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்போனை திருட முயன்றபோது சுர்பதி சர்தார் அவர்களை தடுத்ததால் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
Comments