பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

நான்கு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ஆகஸ்ட் 7ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
Comments