கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழையும், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழயமைன்று, நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும், கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments