அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதே வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.
கோவிட் பாதிப்பு காரணமாக அவகாசம் கோரியிருந்த சோனியா, இன்று காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் செல்ல உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி சாலைகளில் போக்குவரத்தை முடக்கவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தவும் காங்கிரஸ் கட்சியினர் தலைநகரில் குவிந்துள்ளனர்.
Comments