"கொரோனாவில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"கொரோனாவில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவில் இருந்து தாம் நலமடைந்துவிட்டதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தொற்று பெரியளவில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தொற்றில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை வீட்டில் இருந்தாலும் கவனிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments