லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரிகளின் பெயர்களை ஒப்படைக்க வேண்டும் - சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

0 1214
லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரிகளின் பெயர்களை ஒப்படைக்க வேண்டும் - சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி திகார் மற்றும் ரோகினி சிறைச்சாலையில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பெயர்களை 10 நாட்களுக்குள் போலீசாரிடம் ஒப்படைக்குமாறு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் உள்ள தனக்கும், தனது மனைவிக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதா அல்லது மிரட்டி பணம் பறிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியது.

12 கோடியே 50 லட்சம் ரூபாய் யார் மூலம் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்றது என்ற விபரத்தை அறிய விரும்புவதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments