பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் தகவல்

0 2482

ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை Pantsir வான் தடுப்பு சாதனங்களை கொண்டு வானிலே இடைமறித்து தங்கள் ராணுவம் அழித்ததாக லுகான்ஸ்கோ கூறினார்.

கடந்த மூன்று  நாட்களுக்கு முன் இதேபோல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் ஆத்திரமூட்டுவதாக அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments