அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்.. சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கதவை தட்டிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல்..!
அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்.. சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கதவை தட்டிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல்..!
கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படும் நிலையில், நள்ளிரவில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கதவை தட்டிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்த போது, அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.
இதனால், உறவினர்கள் வெகு நேரமாக கதவை தட்டி செவிலியர்களை அழைத்துள்ளனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்த செவிலியர், சானிபவுடர் பருகிய பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
Comments