"நான் ஊதமாட்டேன்... என் டிரைவர் வந்து ஊதுவான்" மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்.!

0 3013

சென்னை மெரினா கடற்கரை அருகே, நள்ளிரவில் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் நபர், ப்ரீத் அனலைசர் கருவியை ஊத முடியாது எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காமராஜர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ஒரு பெண் உட்பட 5 பேர் பயணித்த நிலையில், காரை ஓட்டி வந்த நபரை ப்ரீத் அனலைசர் கருவையை ஊதுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர் தான் மதுபோதையில் இல்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.விசாரணையில் அந்த நபர் வழக்கறிஞர் என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments