மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது

புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான்.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்றவனை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த நபர் உச்சகட்ட போதையில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த நபர் மேட்டுபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற நண்டு ஆறுமுகம் என்பது தெரிய வந்தது.
Comments