விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நண்பனை காப்பாற்ற போராடிய இளைஞன்.. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ரோந்துப் போலீசார்..!
சென்னையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நண்பனைக் காப்பாற்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து உடன் வந்த இளைஞன் நீண்ட நேரமாகப் போராடிய நிலையில், ரோந்துப் போலீசார் அவர்களை தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பணீந்திரா, விஷ்ணு என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சிக்னலில் யூடர்ன் அடிக்கும் போது சாலையில் சறுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதிய நிலையில் பலத்த காயமடைந்த பணீந்திரா உயிருக்கு போராடினார். மற்றொரு மாணவர் விஷ்ணு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை வழிமறித்து உதவி கேட்டிருக்கிறார்.
மழை காரணமாக உதவ யாரும் முன்வராத நிலையில், நீண்ட நேரம் கழித்து அங்கு தற்செயலாக வந்த ரோந்து போலீசார் மாணவர்களை மீட்டனர். அவர்களை தங்களது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், பணீந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments