கல்லூரி மாணவியிடம் விரிவுரையாளர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்.. தர்ம அடி கொடுத்த மாணவியின் உறவினர்கள்

0 5460
கல்லூரி மாணவியிடம் விரிவுரையாளர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்.. தர்ம அடி கொடுத்த மாணவியின் உறவினர்கள்

ஆந்திராவில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, விரிவுரையாளருக்கு மாணவியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த காட்சி வெளியாகியுள்ளது.

சித்தூரில் உள்ள ஆர்.கே.எஸ்.ஆர் ஜூனியர் கல்லூரியில் இயற்பியல் பாடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் சோமையா, அக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து, கல்லூரிக்கு உறவினர்களுடன் வந்த மாணவியின் பெற்றோர் சோமயாவை சரமாரியாக தாக்கினர். மேலும், சோமயாவை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துவிட்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments