3 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார். உலக சுகாதார அமைப்பின் சார்பில் சர்வதேச பாரம்பரிய வைத்திய மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று மாலை காந்தி நகரில் பள்ளிகள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். நாளை காலை பானஸ்காந்தாவில் உள்ள பால்பண்ணையில் 9.30 மணிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.20 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.அதே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு டாஹோட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் விடுத்த டிவிட்டர் செய்தியில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்திய மையம் தொடங்க இருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் பட வேண்டிய விஷயம் என்றும் வரும் காலங்களில் பாரம்பரிய வைத்திய முறைகளால் உலக மக்களின் உடல் நல ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
Comments