உளுந்தூர்பேட்டையில் கல்யாண கோஷ்டி சென்ற டெம்போ ட்ராவலரில் 264 சவரன் நகையை கொள்ளையடித்த 2 பேர் கைது.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கல்யண கோஷ்டி சென்ற டெம்போ ட்ராவலரில் 264 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார், 65 சவரன் தங்கநகை, 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர்களுடன் பெரியசாமி என்பவர் சென்ற டெம்போ டிராவலர் வாகனத்தின் மேல் இருந்த தங்க நகை பையை மர்ம கும்பல் கொள்ளையடித்தது குறித்து சிசிடிவியை ஆராய்ந்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல்களை கொண்டு விசாரித்த போலீசார் ஜஸ்டின், முடி கணேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில், 9 பேர் கொண்டு கும்பல் டாடா ஏஸ் மற்றும் காரில் சென்று கல்யான கோஷ்டியை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரிய வந்தது. சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments