தனியார் நிறுவன பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து… ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

0 2012

கரூரில் தனியார் நிறுவன பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் பழைய இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கரூர் - கோவை சாலையில் திருக்காம்புலியூர் பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல் பணியாளர்கள் வேலை முடித்து விட்டு ஷோரூமை மூடி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

அப்போது பழைய இரு சக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் பகுதியில் திடீரென பிடித்த தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களில் விரைந்து வந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாகவே தீ பற்றி இருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments