தலைநகரில் வகைதொகையின்றி கொரோனா பாதிப்பு.. டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன அலுவலகங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது 50சதவீத ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் அலுவலகங்களை முழுவதும் மூட உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்து ஊக்குவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், அத்தியாவசிய சேவை நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகை உணவகங்கள், மதுபான பார்களும் மூடப்படும் எனவும், பார்சல் சேவைகளும், டோர் டெலிவரி சேவைகளும் வழக்கம்போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments