தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. சென்னையில் ஒரே நாளில் 6190 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தோற்றுக்கு சிகிச்சை பெற்ற 2 ஆயிரத்து ,547 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதிகபட்சமாக சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 190 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 696 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 62 ஆயிரத்து 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Comments