திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை - தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்த நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் ஆகிய தொற்றுக்கள் ஆந்திராவில் அதிகரித்து வரும் நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் வழங்குவதா என்பது குறித்து தேவஸ்தனம் ஆலோசனை நடத்தி வருகிறது.
13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
Comments