ஒமிக்ரான் பரவுவதைத் தடுக்க மும்பையில் டிசம்பர் 31ந் தேதி வரை 144 தடையுத்தரவு
ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் டிசம்பர் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க மும்பை விமானநிலையத்தில் வெளிநாட்டு்ப பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மும்பையில் இதுவரை 13 பேர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா தடுப்பு குறித்து அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Comments