மார்கழி மாதம் இன்று பிறந்தது: திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை மனமுருக துதித்த பக்தர்கள்

மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி, சைவ-வைணவக் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தை தேவர்களுக்கான அதிகாலை நேரமாக புராணங்கள் கூறுவதால், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வண்ணக் கோலமிட்டு இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
கன்னிப்பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைவதற்கு, இம்மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது...
மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இம்மாதத்தில், சுபநிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, இறைவழிபாட்டுக்கு அதிகநேரம் ஒதுக்குகின்றனர்.
மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதிகாலையில் திருவெம்பாவையும், திருப்பாவையும் பாடினால் வாழ்வில் எல்லா வளமும் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை...
Comments