மத்திய பிரதேச நகரப்பகுதிகளில் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு - சிவராஜ் சிங் சவுகான்

கொரோனா பரவல் அதிகரிப்பதால், நகர்ப்புற பகுதிகளில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பதால், நகர்ப்புற பகுதிகளில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
எந்தந்த நகரங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளதோ அங்கு எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.
பெரிய நகரங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். கொரோனா பாதிப்பின் எதிரொலியாக அடுத்த 3 மாதங்களுக்கு, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இயங்கும். மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
Comments