அரக்கோணம் அருகே தேர்தல் தொடர்பான தகராறில் 2 இளைஞர்கள் கொலை...

அரக்கோணம் அருகே தேர்தல் பகை காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளர் மகன் கும்பலாக ஆயுதங்களுடன் ஊருக்குள் சென்று தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் பழனியின் மகன் சத்யா தலைமையில் 10 பேர் சோகனூருக்குச் சென்று அங்குள்ளோர் தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறித் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சத்யாவின் ஆட்கள் அரிவாளால் வெட்டியதில் சோகனூரைச் சேர்ந்த அர்ச்சுனன், சூர்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
சவுந்தரராஜன், மதன் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்ட சூர்யாவுக்குத் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. அர்ச்சுனனுக்குத் திருமணமாகி 8 மாதக் கைக்குழந்தை உள்ளது.
காயமடைந்த மூவருக்குத் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் காவல்துறையினர் தலைமறைவான அதிமுக ஒன்றியச் செயலாளர் மகன் சத்யாவைத் தேடி வருகின்றனர்.
Comments