இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம்..! 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது: 50 பேர் பலி

இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம்..! 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது: 50 பேர் பலி
இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் வரலாறு காணாத கனமழையால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு பிளோர்ஸ் தீவு பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக நகரம் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கட்டுக்கடங்காமல் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 7 கிராமங்கள் நீரில் மூழ்கி, பாலம் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.
வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கு தற்போது வரை 50 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், காணாமல் போன 27 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Comments