தமிழகத்தில் மூன்றாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மூன்றாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று..!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 290 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 715 பேர் குணமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், கொரோனா பாதிப்பு, 2 - வது நாளாக ஆயிரத்தை தாண்டி பதிவாகி இருந்தது.
கோவை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments