அடுத்த 4 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும். அடுத்த 4 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் சிவலோகம், சித்தாறு 2-ல் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவானது.
Comments