தமிழ்நாட்டில் 2- ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 2- ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 2- ஆவது நாளாக ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 634 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆன நிலையில், சென்னை பெருநகரில் புதிதாக 458 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
செங்கல்பட்டில் 134, கோயம்புத்தூரில் 103 , திருவள்ளூரில் 87 மற்றும் தஞ்சாவூரில் 87 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments