கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மதுக் கடைகளை மூட அரசுக்கு உத்தரவிடக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரக்காலமாகக் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் ஒரு முறையீடு செய்தார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மதுக் கடைகளை மூட அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
Comments