ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
தென் தமிழக மாவட்டங்களில் 20-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வருகிற 20-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 20-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், 19-ம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக வருகிற 20-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
Comments