டெல்லி- அமிர்தசரஸ் இடையிலான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

டெல்லி- அமிர்தசரஸ் இடையிலான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்
டெல்லி -அமிர்தசரஸ் இடையிலான பயணத்தில் ரயில்கள் அடுத்து வரும் நாட்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்திற்கு மாற்றப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லூதியானா, ஜலந்தர், வியாஸ் என வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட வடக்கு ரயில்வே பொதுமேலாளர் அசுதோஷ் காகல் தலைமையிலான குழுவினர் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இத்தடத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேகம் கூடினால் ரயில் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இதே போல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் மும்பை-அகமதாபாத் தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments