முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - மு.க.ஸ்டாலின்

எத்தனை தடைகள் வந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, திமுக ஆட்சியமைக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
எத்தனை தடைகள் வந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, திமுக ஆட்சியமைக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டுடே குழுமத்தின் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரபட்ட வழக்கிற்கான உச்சநீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டால், முதலமைச்சருடன் எந்தவொரு இடத்திற்கும் விவாதத்திற்கு வர தாம் தயார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேள்வி-பதில் வடிவிலான கருத்தமர்வில், பங்கேற்ற மு.க.ஸ்டாலின், எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து திமுக ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.
Comments