பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பாட்டியாலா மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இருப்பினும் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், அத்தியாவசிய ஊழியர்களுக்கு ஊரடங்கில் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Comments